ஆன்மிகம்
திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம்

Published On 2020-03-24 08:49 GMT   |   Update On 2020-03-24 08:49 GMT
ஆதிசங்கரர் அருளிய இரண்டு ஸ்ரீசக்கரங்கள், திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி அன்னையின் இரு கால்களில் ஒளிர்வதை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
கஜாரண்யம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்சரம், வெண் நாவல் வனம், சம்பு வனம், ஞான ஷேத்திரம், ஞானத்தலம், ஞான பூமி, அமுதேஸ்வரம் என பலவிதமாக அழைக்கப்படும் திருத்தலம், திருவானைக்கோவில். இது திருச்சி மாநகரில் அமைந்துள்ளது.

பஞ்சபூத தலங்களில் இது நீர் தலமாகும். ஆதிசங்கரர் அருளிய இரண்டு ஸ்ரீசக்கரங்கள், இத்தல அகிலாண்டேஸ்வரி அன்னையின் இரு கால்களில் ஒளிர்வதை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
Tags:    

Similar News