ஆன்மிகம்
வடிவுடையம்மன்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2020-03-02 06:31 GMT   |   Update On 2020-03-02 06:31 GMT
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்றுமுன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரம் புனிதநீர், பால், பன்னீர் உள்ளிட்டவைகளால் சுத்தம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தியாகராஜா, நமச்சிவாய என பக்தி கோஷமிட்டனர். பின்னர் தியாகராஜர் மாடவீதி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 6-ந் தேதியும், திருக்கல்யாண வைபவம் 8-ந் தேதியும் நடைபெறுகிறது. 10-ந்தேதி 18 திருநடனம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News