ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மகா கணபதி யாகம்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மகா கணபதி யாகம்

Published On 2020-01-29 04:14 GMT   |   Update On 2020-01-29 04:14 GMT
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான மகாகணபதி யாகம் நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, எந்த தடங்களும் இன்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற மந்திரங்களை ஓதினர்.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜை நேற்றுமுன்தினம் தொடங்கியது. நேற்றுகாலை மகாகணபதி யாகம் நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, எந்த தடங்களும் இன்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற மந்திரங்களை ஓதினர். பின்னர் பிரம்மச்சாரி பூஜை, தனபூஜை, லட்சுமி யாகம், நவக்கிரக யாகம் நடந்தது. சிறுமிகளை வரிசையாக அமர வைத்து கன்யா பூஜையும், பெண்களை அமர வைத்து சுமங்கலி பூஜையும் நடத்தப்பட்டது.

பூஜை முடிந்தவுடன் யாகத்தில் கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் எடுத்து வரப்பட்டு, பெரியகோவில் சன்னதி நுழைவு வாயிலின் இடதுபுறமுள்ள துவாரக விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பிரவேச பலி நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 1-ந் தேதி மாலை வரை பூர்வாங்க பூஜை நடக்கிறது. 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் முதல் கால யாகபூஜை தொடங்குகிறது.
Tags:    

Similar News