ஆன்மிகம்
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் அலங்காரம்

கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் அலங்காரம்

Published On 2020-01-25 03:49 GMT   |   Update On 2020-01-25 03:49 GMT
கும்பகோணம் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தை மாத அமாவாசை நாளான நேற்று அதிகாலை 5 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள், கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் வாழவும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமனுக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராமன், மோகன் பட்டாச்சாரியார்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News