ஆன்மிகம்
பித்ரு தர்ப்பணம்

தர்ப்பணம் அளிப்பது முக்கியம்

Published On 2020-01-24 08:09 GMT   |   Update On 2020-01-24 08:09 GMT
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு, தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று, பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு, தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். அவ்வாறு எள் கலந்த தண்ணீா் தரப்படவில்லை என்றால், அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்வார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்வாா்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்று விஷ்ணுவும் சிவனும் கூறியிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

நமது முன்னோர்களிடம் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே செய்தால், நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும், பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதை செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது. தர்ப்பணம் செய்து முடிந்த பிறகே, தினமும் செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்யவேண்டும்.

பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்களை மூன்று வகைப்படுத்தலாம். அப்பா வகையைச் சார்ந்த பித்ருக்கள் ‘பித்ருவர்க்கம்’ எனப்படுவார்கள். அம்மா வகையைச் சார்ந்த பித்ருக்கள் ‘மாத்ருவர்க்கம்’ எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் ‘காருணீகவர்க்கம்’ எனப்படுவார்கள்.

தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.
Tags:    

Similar News