ஆன்மிகம்
சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், தாயார்)

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்

Published On 2020-01-17 05:12 GMT   |   Update On 2020-01-17 05:12 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ தலங்களில் 7 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தம் அருளப்பெற்று, திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் திகழ்கிறது.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சங்க்ரமண பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 7 நாட்கள் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், தாயார் தேரில் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் கிழக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News