ஆன்மிகம்
திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்

Published On 2019-12-16 08:09 GMT   |   Update On 2019-12-16 08:09 GMT
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் நடைதிறப்பு, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் நடைதிறப்பு, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ் மாதமான மார்கழி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் நடை திறப்பு, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.

மேலும் ஜனவரி 1-ந் தேதி (புதன்கிழமை) ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் ஜனவரி 15-ந் தேதி (புதன்கிழமை) தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அதேபோல் ஜனவரி 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News