ஆன்மிகம்
தாணுமாலயசாமி கோவிலில் கால்கோள் விழா

தாணுமாலயசாமி கோவிலில் கால்கோள் விழா

Published On 2019-12-16 03:56 GMT   |   Update On 2019-12-16 03:56 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவுக்கான கால்கோள் விழா நடந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ந்தேதி காலை 7.45 மணிக்கு நடக்கிறது.

மார்கழி திருவிழாவுக்கான கால்கோள் விழா நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. இதில் வட்டபள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா, தெற்கு மண்டபம் ஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News