ஆன்மிகம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா நேற்று மாலையில் தொடங்கியது. அய்யா வைகுண்டர் அவதாரபதி தலைவர் வள்ளியூர் தர்மர் திரு ஏடு வாசிப்பு விழாவை தொடங்கி வைத்தார். பரப்பாடி வைகுண்டர் மகாராஜன், பாளையங்கோட்டை ஆனந்த சங்கர் ஆகியோர் திரு ஏடு வாசித்தனர்.
விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுதுரை, துணை தலைவர்கள் அய்யாபழம், பால்சாமி, பொருளாளர் ராமையா நாடார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நடைபெறும் விழா நாட்களில் தினமும் மதியம் 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நாளான வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் திருக்கல்யாணமும், அய்யா புஷ்ப வாகன பவனியும் நடைபெறுகிறது. வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பட்டாபிஷேகம் நடைபெற்ற பின்னர் அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுதுரை, துணை தலைவர்கள் அய்யாபழம், பால்சாமி, பொருளாளர் ராமையா நாடார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நடைபெறும் விழா நாட்களில் தினமும் மதியம் 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நாளான வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் திருக்கல்யாணமும், அய்யா புஷ்ப வாகன பவனியும் நடைபெறுகிறது. வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பட்டாபிஷேகம் நடைபெற்ற பின்னர் அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.