ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

மணலி புதுநகர் வைகுண்டத்தில் அகிலத்திரட்டு உதய திருவிழா

Published On 2019-12-14 03:31 GMT   |   Update On 2019-12-14 03:31 GMT
மணலி புதுநகர் வைகுண்டத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் அய்யா அருளிய அகிலத்திரட்டு உதய திருவிழா நடைபெற்றது.
மணலி புதுநகர் வைகுண்டத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் அய்யா அருளிய அகிலத்திரட்டு உதய திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, திருஏடு வாசிப்பு, திருவிளக்கு நடைபெற்றது.

முன்னதாக அய்யா வைகுண்ட தர்மபதி இணைத் தலைவர் தேவதாஸ் திருஏடு வாசிப்பு விளக்க உரையாற்றினார். தலைமை பணியாளர் ஆதிலிங்கம் திருஏடு வாசித்தார்.

அதன் பின்னர், மாலை அய்யா வைகுண்டர் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் பதிவலம் வந்தார். விழாவில் வினாவிடை, எழுத்துப் போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சான்றிதழ் மற்றும் பரிசுகளையும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Tags:    

Similar News