ஆன்மிகம்
திருவண்ணாமலையில் இன்று இரவில் வெள்ளி தேரில் அருணாசலேஸ்வரர் பவனி
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவில் இன்று இரவு மின் அலங்காரத்தில் ஜொலிக்கும் வெள்ளித்தேரில் அருணாசலேஸ்வரர் பவனி வருகிறார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவில் இன்று இரவு மின் அலங்காரத்தில் ஜொலிக்கும் வெள்ளித்தேரில் அருணாசலேஸ்வரர் பவனி வருகிறார்.
கார்த்திகை தீப திருவிழாவின் 6-வது நாளான இன்று காலை நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து ராஜாகோபுரம் முன்பு தங்க யானை வாகனத்தில் சந்திரசேகர் எழுந்தருளினார்.
ராஜகோபுரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு யானை வாகனம் மாட வீதிகளில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாடவீதிகள் முழுவதும் திரண்டிருந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரருக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
இன்று இரவு வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. மின் அலங் காரத்தில் ஜொலிக்கும் வெள்ளி தேரில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளுகின்றனர். மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது.
தேரோட்டத்தை யொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவின் 6-வது நாளான இன்று காலை நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து ராஜாகோபுரம் முன்பு தங்க யானை வாகனத்தில் சந்திரசேகர் எழுந்தருளினார்.
ராஜகோபுரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு யானை வாகனம் மாட வீதிகளில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாடவீதிகள் முழுவதும் திரண்டிருந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரருக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
இன்று இரவு வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. மின் அலங் காரத்தில் ஜொலிக்கும் வெள்ளி தேரில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளுகின்றனர். மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது.
தேரோட்டத்தை யொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.