ஆன்மிகம்
காசி விசுவநாத சுவாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

Published On 2019-12-03 06:08 GMT   |   Update On 2019-12-03 06:08 GMT
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் செங்கோட்டை கிளை சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் செங்கோட்டை கிளை சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக பஜனை, சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திர பொருளாளர் அனுமந்த ராவ் தலைமை தாங்கினார். தெய்வானை இறைவணக்கம் பாடினார். திருவிளக்கு பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னையா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி வரவேற்றார். கிரு‌‌ஷ்ணமூர்த்தி, குற்றாலம் விவேகானந்த ஆசிரம நிர்வாகி அகிலானந்த சுவாமி ஆகியோர் பேசினார்கள்.

தொழிலதிபர் ஜெயபால், விவேகானந்த கேந்திர செயலாளர் கலா, ஷோபனா ராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், வேல்ராஜ், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News