ஆன்மிகம்
சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2019-11-20 04:16 GMT   |   Update On 2019-11-20 04:16 GMT
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி இந்த மாத வழிபாடு நேற்று நடந்தது.

இதையொட்டி பால், பழம், சந்தனம், திருமஞ்சனப்பொடி, மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் முழங்க வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News