ஆன்மிகம்
கார்த்திகை மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2019-11-18 04:52 GMT   |   Update On 2019-11-18 04:52 GMT
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பு மற்றும் வாரவிடுமுறை நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பு மற்றும் வாரவிடுமுறை நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பழனி முருகன் கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் ஆனந்த விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிந்து கொண்டனர். பழனி கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலையில் உள்ள முருகன்கோவிலுக்கு சென்றனர்.

இதேபோல் முருகன்கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News