ஆன்மிகம்
கல்யாண முகூர்த்தம் பார்க்கும் போது..

கல்யாண முகூர்த்தம் பார்க்கும் போது..

Published On 2019-11-15 06:48 GMT   |   Update On 2019-11-15 06:48 GMT
திருமணத்திற்கு என்று சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
திருமணத்திற்கு என்று சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது, மொத்தம் ஐந்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம் குறிக்க வேண்டும். அவை, முகூர்த்தக் கால் நட்டுவதற்கான நேரம், மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம், பெண் அழைப்பிற்கான நேரம், திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம், சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்.

இதில் இரண்டாவதாக வரும் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது, வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அழைத்துவிட யோசிப்பார்கள். லட்சுமி கடாட்சம் தம் வீட்டிலேயே தங்கவேண்டும் என்று விரும்புவார்கள். அதேசமயம் மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம்.

பெண் அழைப்புதான் புகுந்த வீட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. நல்ல சுப ஓரை பார்த்து சாந்திமுகூர்த்தம் நடத்தினால், ஆண் வாரிசுகள் பிறக்கும். அதேநேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து, அதன் பின்னர் சாந்திமுகூர்த்தம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு பிறர் போற்றும் அளவு வாழ்க்கை அமையும்.
Tags:    

Similar News