ஆன்மிகம்
கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2019-11-14 03:24 GMT   |   Update On 2019-11-14 03:24 GMT
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர், விருத்தாசலம் வேடப்பர், ஆதி கொளஞ்சியப்பர், முதனை செம்புலிங்க அய்யனார், விருத்தகிரிகுப்பம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Tags:    

Similar News