ஆன்மிகம்
சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2019-11-11 04:08 GMT   |   Update On 2019-11-11 04:08 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். ஏனென்றால் இந்த மலை சிவனாக போற்றப்படுகிறது. மேலும் புண்ணியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். எனவே ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும்.

மேலும் சித்ரா பவுர்ணமி, மகா தீபத்திருநாள் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வாரவிடுமுறை நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன்படி, நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த மாதத்துக்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை பவுர்ணமி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News