ஆன்மிகம்
பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்
ஐப்பசி மாத பிறப்பையொட்டி பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பழனி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பட்டத்து விநாயகர் கோவில், அடிவாரம் பாதவிநாயகர் கோவில்களிலும் ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.