ஆன்மிகம்
விநாயகர்

கோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்

Published On 2019-10-16 07:49 GMT   |   Update On 2019-10-16 07:49 GMT
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் உள்ளது. இங்கு கோடி விநாயகர் உள்ளார். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் உள்ளது. இங்கு கோடி விநாயகர் உள்ளார். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.

ஒரு தடவை இளவரசன் ஒருவனுக்கு பத்திரயோகி முனிவர் கடும் சாபம் கொடுத்தார். இதன் காரணமாக அவரது தவவலிமை குன்றியது. இதனால் வருந்தியவர் பரிகாரம் தேட முற்பட்டார். பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவனை வழிபட்ட அவர் கொட்டையூருக்கும் வந்தார்.

இங்கு அமுத கிணற்று நீரில் பத்திரயோகி முனிவர் நீராடி, சிவனாரை மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டு கோவிலை வலம் வந்து வணங்கினார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. Òபத்ர யோகி கோடி தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். இந்தத் தலமே பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடி லிங்கம். இந்த தீர்த்தமே கோடி தீர்த்தம். இந்த விநாயகரே கோடி விநாயகர் என்றது அசரீரி.

இந்த ஸ்ரீகோடி விநாயகரை வழிபட கோடித் தலங்களுக்குச் சென்று, கோடி விநாயகர்களை வழிபட்டால் பெரும்பலன் கிடைக்கும்.
Tags:    

Similar News