ஆன்மிகம்
வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

Published On 2019-10-11 06:29 GMT   |   Update On 2019-10-11 06:29 GMT
கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி கருட கம்பத்தில் வேத விற்பன்னர்கள் வேதகோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.
கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான கரிவரதராஜ பெருமாள் கோவில் வடவள்ளியில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி கருட கம்பத்தில் வேத விற்பன்னர்கள் வேதகோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை தினமும் வேள்வி பூஜைகளும் மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 14-ந் தேதி மாலை 6 மணிக்கு கரிவரதராஜ பெருமாள் பூமாதேவி, லட்சுமி சமேதராக கருட வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். 18-ந்தேதி தேதி காலை 9 மணிக்கு பூமாதேவி சமேத கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம், மாலை கரிவரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News