ஆன்மிகம்
தல்லாகுளம் பெருமாள் கோவில்

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் 30-ந்தேதி புரட்டாசி திருவிழா

Published On 2019-09-24 04:46 GMT   |   Update On 2019-09-24 04:46 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உப கோவிலாக மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உப கோவிலாக மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழா தனி சிறப்புடையதாகும். இந்த விழாவானது வருகிற 30-ந்தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும்.

அக்டோபர் 1-ந்தேதி காலை கிருஷ்ணாவதாரமும், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 2-ந்தேதி காலை ராமர் அவதாரமும், இரவு அனுமார் வாகனத்தில் வீதி உலாவும், சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

3-ந்தேதி காலை கஜேந்திர மோட்சமும், அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும், 4-ந்தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறுகிறது.

5-ந்தேதி காலை காளிங்கநர்த்தனமும், அன்று இரவு மோகன அவதாரமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். 6-ந்தேதி காலையில் சேஷ சயனமும், இரவு புஷ்ப சப்பரமும், 7-ந்தேதி காலையில் வெண்ணைதாழியும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.

8-ந்தேதி காலையில் தேரோட்டமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 9-ந்தேதி பூச்சப்பரம் நடைபெறும். 10-ந்தேதி காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறும்.

அன்று காலை பெருமாள் தேவியர்களுடன் தெப்பத்திற்கு எழுந்தருள்வார். தொடர்ந்து 10.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறும்.

11-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News