ஆன்மிகம்
விநாயகர்

வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்

Published On 2019-09-17 06:27 GMT   |   Update On 2019-09-17 06:27 GMT
விநாயகர் அகவலை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினாலும், அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.
எந்தக் கிழமைகளில் விநாயகரை வழிபட மறந்தாலும், வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய மற்றொருவர் அவ்வையார்.

அவர் ‘சீதக்களப செந்தாமரைப்பூம்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை பாடியருளியவர். இந்த விநாயகர் அகவலை, சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினாலும், அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.

“விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல, உலகுக்கே நல்லது” என்று சொல்லியிருக்கிறார் காஞ்சி மகாப் பெரியவர்.

Tags:    

Similar News