ஆன்மிகம்
வீட்டுக்குள் வரும் லட்சுமி

வீட்டுக்குள் வரும் லட்சுமி

Published On 2019-09-09 09:03 GMT   |   Update On 2019-09-09 09:03 GMT
உலகத்தைப் படைத்தபோது பிரம்மா பசுவையும் படைத்தார். அது மட்டுமின்றி பசுவின் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இடம் பெறச் செய்தார்.
உலகத்தைப் படைத்தபோது பிரம்மா பசுவையும் படைத்தார். அது மட்டுமின்றி பசுவின் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இடம் பெறச் செய்தார்.

எல்லாத் தேவர்களும் பசுவின் உடலில் இடம் பெற்றுவிட்ட நிலையில் கங்கா தேவிக்கும், மகா லட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற் பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது. தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டனர். அதனால் தான் நாம், பசுவின் முன் பாகத்தையோ, முகத்தையோ தொட்டு நம்முடைய கண்களில் பக்தி உணர்வுடன் ஒற்றிக் கொள்வதோடு கோமாதா வழிபாட்டை முடித்து கொள்வதில்லை. பசுவின் பின் பகுதியையும் தொட்டு இரண்டு கண்களிலும் பணிவுடன் ஒற்றிக்கொள்கிறோம். அதனால்தான் சாணத்துக்கும், கோமியத்துக்கும் அவ்வளவு மரியாதையும் மதிப்பும் உள்ளது.

பசு தரும் சாணத்தைத்தான் நாம் பெரும் புனிதப் பொருளாகக் கருதி அதிலிருந்து விபூதி தயாரித்து நம் உடம்பெங்கும் பூசி நோய்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறோம். அதுபோல பசுவிடம் இருந்து நாம் பெறும் கோமியமும் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம். புது வீட்டுக்குள் வரும் பசு அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அது தன் கோமியத்தை இட வேண்டும்; அந்தக் கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து அந்தப் புதுமனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே. புதுமனைபுகு விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய், நொடியின்றி செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
புதுமனைப் புகுவிழா நடை பெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள். அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத் தைத் தருவதாகும்.

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப் பலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்ர விருத்தி யையும், நெய் மோட்சத் தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும். பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. சிவனுக்கு அபிஷேகம் செய்து, அவனை அர்ச்சித்து, ஆராதித்தால் அவனது அருட்கடலில் மூழ்கித் திளைக்கும் பெரும் பேறு அடியவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்வியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News