ஆன்மிகம்
ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

Published On 2019-08-17 06:09 GMT   |   Update On 2019-08-17 06:09 GMT
திருமங்கலம் சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
திருமங்கலம் சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்று வருகிறது. முதல் நாள் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

2-ம் நாள் திருவிழாவில் நேற்று முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நடந்தது. இதைதொடர்ந்து அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து 41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பூச்சொரிதல் நிகழ்ச்சியில் கூடை கூடையாக அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.

விழாவில் இன்று(சனிக் கிழமை) மாரியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சிக்கலயம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News