ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து காவிரித்தாய்க்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி தாயாருக்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

Published On 2019-08-14 05:43 GMT   |   Update On 2019-08-14 05:43 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

அதன்படி இந்தாண்டு ஆடி 28-ம் நாளான நேற்று காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி முற்பகல் 11.30 மணிக்கு அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. அப்போது பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News