ஆன்மிகம்
நவநீதபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

நவநீதபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

Published On 2019-07-22 03:34 GMT   |   Update On 2019-07-22 03:34 GMT
வாடிப்பட்டி நீரேத்தான் மந்தைதிடலில் பழமையும் பெருமையும் வாய்ந்த நவநீதபெருமாள்கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
வாடிப்பட்டி நீரேத்தான் மந்தைதிடலில் பழமையும் பெருமையும் வாய்ந்த நவநீதபெருமாள்கோவிலில் உலகநன்மைக்காகவும் மழைவேண்டியும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி விஸ்வரூப தரிசனம், கோபூஜை,மூலவர் திருமஞ்சனம் நடந்தது. கிருஷ்ணானுபவம் என்ற தலைப்பில் ஸ்ரீநிவாச ஆச்சாரியார் பக்திசொற்பொழிவாற்றினார்.

நீரேத்தான் கிராம சாவடியில் இருந்து கிராம பெரியவர்கள் முன்னிலையில் மணமக்கள் அழைப்பு ஊர்வலம் நடந்தது. பின்னர் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது.இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர்கள், கிராமபொதுக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News