ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி

Published On 2019-07-18 05:57 GMT   |   Update On 2019-07-18 05:57 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் காலையும், மாலையும் சந்திரசேகர் மற்றும் விநாயகர் வீதி உலா நடந்தது. இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை மாட வீதியில் விநாயகர், சந்திரசேகர் வீதியுலா நடந்தது.

இதையடுத்து அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அய்யங்குளம் முன்பு உள்ள மண்டபத்தில் சந்திரசேகர் அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதையடுத்து சிவாச்சாரியார்கள் மூலம் சந்திரசேகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் சாமியிடம் இருந்து சூலத்தை எடுத்து சென்று அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தினர்.

பின்னர் சிவாச்சாரியார்கள் சூலத்தை சாமியிடம் வைத்தனர். தொடர்ந்து அய்யங்குளம் எதிரே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 
Tags:    

Similar News