ஆன்மிகம்

கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2019-06-26 06:04 GMT   |   Update On 2019-06-26 06:04 GMT
கொடைக்கானல் நகர் டர்னர்புரம் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. விழாவின் இறுதி நாளாக அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
கொடைக்கானல் நகர் டர்னர்புரம் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று விழாவின் இறுதி நாளாக அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக டர்னர்புரத்தில் உள்ள கோவிலை வந்தடைந்தனர்.

அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மறுபூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல கொடைக்கானல் நகர் அப்சர்வேட்டரி புதுக்காடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் இறுதிநாளான நேற்று மறுபூஜை, பாலாபிஷேகம் மற்றும் பால்குடம் ஆகியவை நடந்தது.

இதனையொட்டி பக்தர்கள் பேரிபால்ஸ் பகுதியிலிருந்து பால்குட ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை புதுக்காடு பகுதி பொதுமக்கள், விழா கமிட்டியாளர்கள் மற்றும் கோவில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News