பொங்கல் பண்டிகையையொட்டி மூடப்பட்ட நாகூர் தர்கா 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி பேராலயத்தில் வழிபட மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி நாகூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவும் 5 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபட அனுமதிக்கப்பட்டனர். வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் நாகூர் சில்லடி கடற்கரை செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.