திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) முதல் அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.
இதனையொட்டி வழக்கமான நேரத்திற்கு நடைதிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினையொட்டி வழிபாடு தலங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது.
அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.