பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதேபோல் சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. அப்போது வழக்கமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு பதிலாக பெரியநாயகி அம்மன் கோவிலின் உள்பிரகாரத்தில் சிறிய தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் உலா வருவார்.
இதற்கிடையே தைப்பூச திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.