தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்!!!!
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத்!!!
மந்திரத்தின் பொருள்: முக்கண்களைக் கொண்ட ஈசனே! எல்லா வளமும், நலமும், ஊட்டமும் பெருகும்படி செய்யும் உன்னை, யாகம் செய்து பூஜிக்கிறேன்! வெள்ளரிப்பழம் போல இறப்பின் பிடியிலிருந்து விடுதலை செய்து சாகாமையை அருள்க.
மந்திரத்தின் விளக்கம்: எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு ஈசனுக்கு இருக்கிறது என்றால் அது முக்கண்கள் ஆகும். அழித்தல் தொழிலை செய்யும் ஈசனிடம் இறவாமையை அருளும் சக்தி உண்டு என்பதற்கு இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் கண்ணால் யாவற்றையும் அழிக்கும் திறன் படைத்தவருக்கு எமனையும் அழிக்கும் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைகிறது.