கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் கோவிலில் இன்று நடைபெற இருந்த தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து அங்கு மாலை 6 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வைக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடத்தப்படும். பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாமியுடன் கூடிய தெப்பமானது தெப்பக்குளத்தை 13 முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைப்பூச தெப்பதிருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் நடைபெறவிருந்த சாமி அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலாக கோவிலின் உள்ளேயே வைத்து சாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடத்த கோவில் நிர்வாக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.