திருப்பரங்குன்றம் கோவிலில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
அதேபோல வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.