மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான 21-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.