வீட்டிலும், தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை உயர சிவபெருமான எப்படி வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
இப்படிப்பட்ட நஷ்டத்தால் மன வருத்தம் உண்டாவதோடு, வேறுவழியின்றி கடன் தொல்லைக்குள் சிக்குகின்றனர். இதிலிருந்து மீண்டு வர எளிய பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வர படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும்.
செல்வங்களின் அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவி, குபேரருக்கு நவநிதிகளை வழங்கியவர் சிவபெருமான். வீட்டில் பணம் நிலைக்கவில்லையா?இந்த எளிய ஜோதிட வழிகாட்டுதல் உங்களை செல்வந்தர் ஆக்கும்!
சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அதனால் திங்களன்று அல்லது பிரதோஷ தினம் விசேஷமான கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த தினங்களில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். தொழிலில் லாபம் உண்டாகும்.
இந்த விரதம் ஈசனுக்கு உரிய கார்த்திகை திங்கட்கிழமைகளில் செய்வதும். அன்றைய தினம் மகாலட்சுமி அம்சமான பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபடுவதன் மூல சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.