சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
விரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்
பதிவு: ஜனவரி 07, 2021 09:11
பெருமாள்
‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்- அது நாராயணன் என்னும் நாமம்’ என்பர் ஆன்மிகப் பெரியோர்கள். ஸ்ரீமன் நாராயணன், காக்கும் கடவுள். அவரது அபயகரம் பாதத்தை நோக்கி இருக்கும். தன்னை சரணடைந்தவர்களுக்கு சந்தோஷத்தை வழங்குவார்.
இந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் பரங்கிப் பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஆண்டாள், விஷ்ணுவை வழிபட்டு சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறி யதை நாம் அறிந்திருக்கிறோம்.
இப்படி சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
விஷ்ணுவை வழிபட்டு அவரது துணையாக விளங்கி செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்கும் சென்று லட்சுமி வருகைப் பதிகம் பாடி னால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவாள். அஷ்டலட்சுமியின் படத்தையும், விஷ்ணு படத்தோடு இணைத்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் நிறைவேறும்.
எட்டு வகை லட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன்! கோலமயில் ஆனவளே!
வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும் ஆதிலட்சுமியே!
வட்டமலர் மீதமர்ந்து வருவாய் இதுசமயம்.
என்று பாடுங்கள்.
எட்டுவகை லட்சுமியும் வேண் டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்குவர்.
-‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
Related Tags :