சினிமா
வாய்ப்பை தவறவிட்டு புலம்பும் நடிகை
தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் தேடி வந்த வாய்ப்பை தவறவிட்டு தற்போது புலம்பி வருகிறாராம்.
தமிழில் களவாணியாக வந்த நடிகை, பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். அதிக ரசிகர்கள் பட்டாளத்துடன் வெளியான நடிகைக்கு பல பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால், நடிகை ரொம்ப கெத்து காட்டி வந்த பட வாய்ப்புகளை தவறவிட்டாராம்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் புலம்பி வருகிறாராம். மாறாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த படங்கள் ரொம்ப சின்ன படங்களாம். மேலும் சிறிய பட்ஜெட் படம் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருக்கிறாராம்.