சினிமா
கிசுகிசு

தேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்பும் நடிகை

Published On 2020-05-31 12:23 GMT   |   Update On 2020-05-31 12:23 GMT
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்புகிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர் வருத்தப்படாமல் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், அடுத்தடுத்து பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை ஆனாராம். குடும்பப்பாங்கான வேடங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் அந்த நடிகை, ஒரு கட்டத்திற்கு மேல் லட்சத்தில் இருந்த தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தினராம். 

ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடன் கோடிகளில் சம்பளம் கேட்ட அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டவில்லையாம். இதனால் தேடிவந்த வாய்ப்புகளை தவறவிட்ட அந்த நடிகை, தற்போது படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம்.
Tags:    

Similar News