சினிமா செய்திகள்
'நான் பிறந்த தினமே'.. நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ்
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
- திருமணத்திற்கு பிறகு இருவரும் தேனிலவு சென்று தாயகம் திரும்பியுள்ளனர்.
விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இந்திய திரையுலகின் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்னர் தேனிலவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன் பதிவு செய்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவுடன் இருக்கும் ஒரு புதிய படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவர் எழுதிய நான் பிழை பாடலில் இடம்பெற்றுள்ள 'நான் பிறந்த தினமே' என்ற வரியை குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.