சினிமா செய்திகள்

ஸ்ரீனிவாச மூர்த்தி

டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மரணம்.. சோகத்தில் திரையுலகம்..

Published On 2023-01-28 06:30 GMT   |   Update On 2023-01-28 06:30 GMT
  • ஸ்ரீனிவாச மூர்த்தி 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
  • இவர் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி, மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

1990-களில் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பணியைத் தொடங்கிய ஸ்ரீனிவாச மூர்த்தி கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் அனைத்து படங்களுக்கும் இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.


ஸ்ரீனிவாச மூர்த்தி

55 வயதாகும் ஸ்ரீனிவாச மூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Tags:    

Similar News