சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் - உதயநிதி

சிவகார்த்திகேயன் பேசிய அரசியல் வசனம்.. சுட்டிக்காட்டிய உதயநிதி

Published On 2022-05-08 10:24 GMT   |   Update On 2022-05-08 10:25 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியது வைரலாகி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலரில் சிவகார்த்திகேயன் பேசிய வசனம் பரபரப்பாக இருந்தது. அரசியலுக்கு வந்தால் நிறைய பொய் சொல்ல வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் படத்தின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 


சிவகார்த்திகேயன் - உதயநிதி

அப்போது அவர் சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். இதனால் சிவகார்த்திகேயன் எழுந்து டிரைலரில் இந்த வசனத்தை வைப்பார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பேன் என்று நினைக்கவும் இல்லை என்று சொன்னார். இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். 
Tags:    

Similar News