சினிமா செய்திகள்
சுரேஷ் கோபி

அம்மன் கோவிலுக்கு வாள், சிலம்பு காணிக்கையாக வழங்கிய அஜித் பட நடிகர்

Published On 2022-04-21 05:43 GMT   |   Update On 2022-04-21 05:43 GMT
கேரளாவில் பிரசித்தி பெற்ற கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு வாள், சிலம்பு காணிக்கையாக நடிகர் சுரேஷ் கோபி வழங்கி இருக்கிறார்.
கேரளாவில் உள்ள கொடுங்கலூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நடிகரும், பாரதிய ஜனதா மேல் சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வார். தற்போது இக்கோவிலுக்கு சென்ற நடிகர் சுரேஷ் கோபி அம்மனுக்கு வாளும், சிலம்பும் காணிக்கையாக வழங்கினார்.



கொடுங்கலூர் கோவிலில் தரிசனம் முடிந்த பின்னர் அவர் திருச்சூர் கோவிலுக்கு சென்றார். அங்கு பூரம் விழாவையொட்டி சமய கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். சுரேஷ் கோபி தமிழில் அஜித்துடன் தீனா, சரத்குமாருடன் சமஸ்தானம், விக்ரமுடன் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Tags:    

Similar News