சினிமா செய்திகள்
சிரஞ்சீவி

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி

Published On 2022-01-26 06:05 GMT   |   Update On 2022-01-26 06:05 GMT
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகும் போலா சங்கர் என்ற படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்றிலிருந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.



முன்னதாக கடந்த நவம்பர் நவம்பர் மாதம் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
Tags:    

Similar News