சினிமா செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்!
பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டது அதிலிருந்து அவர் குணமடைந்துள்ளதாக பகிர்ந்துள்ளார்.
கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 11-ம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் குணமடைந்துள்ளதை அவருடைய சமூக வலைத்தளப் பக்த்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்த நாட்களில் எதிர்மறை என்பது நேர்மறையான விஷயத்தைக் குறிக்கின்றது. உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. பொங்கல் மற்றும் சங்கராந்தியை கொண்டாடிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
இதனுடன் கீர்த்தி சுரேஷ் தற்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
'Negative' can mean a positive thing these days. Grateful for all your love and prayers, hope you had a lovely Pongal and Sankaranthi! 🤗❤️ pic.twitter.com/Sop5wPfBA1
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 18, 2022