சினிமா
வடிவேலு - விவேக்

விவேக் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் வடிவேலு பரபரப்பு பேச்சு

Published On 2021-09-10 15:08 GMT   |   Update On 2021-09-10 15:26 GMT
மறைந்த காமெடி நடிகர் விவேக் பற்றி நடிகர் வடிவேலு செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பாக பேசி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அவர் பேசும் போது, ‘ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு தற்போது பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. நான் எப்போ அவரை பார்த்தேனோ அப்பவே லைப் பிரைட்டா மாறிவிட்டது.

திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கூட நடிப்பேன். விவேக் எனக்கு அருமையான நண்பர். அவரது இழப்பை மறக்க முடியாது. மிகப்பெரிய வேதனை. விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன். நாய் சேகர் படத்தின் தலைப்பு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும். இந்த படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறேன். 



நான் சினிமாவில் நடிக்க இருக்கும் செய்தி கேள்விப்பட்டு, லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அர்ஜுன் உள்ளிட்ட பலர் போன் செய்து வாழ்த்து சொன்னார்கள்’ என்றார். 

இறுதியாக ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ என்ற பாடலைப் பாடி அசத்தினார் வடிவேலு.
Tags:    

Similar News