சினிமா
நயன்தாரா - அஜ்மல்

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் அஜ்மல் அமீர்

Published On 2021-08-31 15:07 GMT   |   Update On 2021-08-31 15:07 GMT
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் அஜ்மல் அமீர்.
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் நயன்தாராவுடன் அஜ்மல் அமீர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



நயன்தாரா அடுத்ததாக ‘பிரேமம்’, ‘நேரம்’ படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க இருக்கிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News