சினிமா
தாய் உஷா ராஜேந்தருடன் சிம்பு

வன விலங்கு அதிகாரிகளிடம் உடும்பை ஒப்படைத்த சிம்புவின் தாய்

Published On 2021-08-09 11:27 GMT   |   Update On 2021-08-09 14:21 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தனது கார்டனில் இருந்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தரின் மனைவியும், சிலம்பரசனின் தாயுமான உஷா ராஜேந்தருக்கு சொந்தமான டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது. கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. 

அப்போது ஒரு உடும்பு பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார்.



இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறினார். மேலும் வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News