சினிமா
பிரபாஸ்

அடுத்தடுத்து 4 பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் பிரபாஸ்

Published On 2021-08-01 06:08 GMT   |   Update On 2021-08-01 06:08 GMT
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், தற்போது நான்கு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாசுக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் அவர் கைவசம் உள்ள ராதே ஷியாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

ராதே ஷியாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் கொரோனாவால் திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முடியவில்லை. ராதே ஷியாம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று தற்போது அறிவித்து உள்ளனர். இதுபோல் சலார் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. இதில் சுருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். 


பிரபாஸ்

ஆதிபுருஷ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமனாகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கிரித்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பும் 30 சதவீதம் முடிந்துள்ளது. இந்த படங்களை முடித்து விட்டு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இதில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
Tags:    

Similar News