சினிமா
ஆர்யா - சாயிஷா

ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

Published On 2021-07-24 06:24 GMT   |   Update On 2021-07-24 15:20 GMT
கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்த ஆர்யாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் 'அறிந்தும் அறியாமலும்' 'நான் கடவுள்', 'மதராசப்பட்டினம்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது சாயிஷாயுடன் காதல் மலர்ந்தது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.



திருமணத்துக்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சாயிஷா கர்ப்பமானார். இந்நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூலை 23) இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
Tags:    

Similar News